இந்நிலையில் எஞ்சியுள்ள 4 பேர் தூக்கு தண்டனைக்கான நாட்களை எண்ணிக்கொண்டு வந்தனர். குற்றவாளிகள் 4 பேருக்கு உடனே மரண தண்டனையை நிறைவேற்றக் கோரி நிர்பயாவின் தாயின் மனு மீது டெல்லி ஐகோர்ட் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
2012ல் டிசம்பர் மாதம் இரவு பேருந்தில் பயணம் செய்த மருத்துவ மாணவியை 6 பேர் கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு சாலையில் தூக்கி எறிந்த சம்பவம் இந்திய நாட்டை அதிரச் செய்தது. இப்பெரும் துன்பத்திற்கு ஆளான அந்த மாணவி12 நாள் போராட்டத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2012ஆம் ஆண்டில் தேசத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனங்களையும், கோரிக்கைகளையும் விடுத்து வந்தனர். உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இந்த வருடமே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது
நிர்பயா வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா,