திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு இனிப்பான செய்தி

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு இனிப்பான செய்தியை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டு மட்டும், ஏழுமலையானை தரிசித்துள்ள இரண்டு கோடிக்கும் மேலான பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையின் மூலம் மட்டும் 1,162 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

திருப்பதி என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது இங்கு பிரசாதமாக தரப்படும் லட்டு தான். உலகில் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு லட்டு விநியோகிக்கப்பட்டாலும், அவை எதுவும் திருப்பதி லட்டுக்கு ஈடாகாது எனச் சொல்லும் அளவுக்கு, ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக தரப்படும் லட்டுக்கு பக்தர்கள் மத்தியில் சிறப்பிடம் உண்டு.


பாலாஜியின் பக்தர்கள் மற்றும் லட்டு பிரியர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

அதாவது, இதுநாள் வரை ஏழுமலையானை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு சலுகை விலையில் 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.